Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஆதரவை மீட்டுக் கொண்டதாகக் கூறப்படுவதை மறுத்தார் சப்ரி
தற்போதைய செய்திகள்

ஆதரவை மீட்டுக் கொண்டதாகக் கூறப்படுவதை மறுத்தார் சப்ரி

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.23-

தானும் 13 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறுத்தார். சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த BERA நாடாளுமன்ற உறுப்பினரான அவர், அது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி என்றும், பாரிசான் நேஷனல் நிகராளிகளுக்கு இடையிலான நல்லுறவை உடைத்துச் சந்தேகத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் விவரித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க அவர் விரும்பவில்லை என்றும், ஆனால் இவ்விவகரம் ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து பரவுவதைக் கண்ட பிறகு பதிலளிக்க முன்வந்ததாகவும் அவர் கூறினார். அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின் மீது, இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற சில நடவடிக்கைகள் மூலம், பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவையும் காண முடியும் என்று அம்னோவின் முன்னாள் துணைத் தலைவருமான அவர் கூறினார்.

கடந்த மார்ச் 17 ஆம் தேதி அன்று, 14 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டதாக பாரிசான் நேஷனல் பொதுச் செயலாளர் ஸாம்ரி அப்துல் காடீர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மக்கள் நிகராளிகளிடையே ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சி என்று அவர் கூறினார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்க்குள் நாடு முழுவதும் 1,000 மடானி பொழுதுபோக்கு பூங்காக்கள்

2030-ஆம் ஆண்டிற்க்குள் நாடு முழுவதும் 1,000 மடானி பொழுதுபோக்கு பூங்காக்கள்

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்