சாலைத் தடுப்புச் சோதனையில் நிற்காமல் தப்பியோடிய ஒரு நபர், போலீஸாரின் துரத்தலுக்குப் பிறகு பிடிபட்டார். கிளந்தான்- ஜாலான் ஜெடோக் பகுதியில் அந்த நபர் திடீரெனத் தனது காரைத் திருப்ப முயன்றபோது, பின்னால் வந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்திற்குப் பிறகு பிடிபட்ட அந்த நபரின் காரைச் சோதனையிட்டபோது, ஓட்டுநர் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 போதை மாத்திரைகளை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
அத்துடன் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதியானது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப்பொருள் வைத்திருத்தல் உள்ளிட்ட பல சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.








