பெட்டாலிங் ஜெயா, மார்ச்.13-
பெட்டாலிங் ஜெயாவில் இரு கார்களில் பயணம் செய்த நபர்கள், சாலை நடுவே தங்கள் கார்களை நிறுத்தி விட்டு அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாபாஃர் தெரிவித்தார்.
இந்த காணொளி கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.40 மணி முதல் வைரலாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டு பெரோடுவா மைவி ரக கார்களில் வந்த இரு கும்பல்கள், தங்கள் காரை நிறுத்தி விட்டு, சாலை நடுவே ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதை அந்த காணொளி சித்தரிப்பதாக ஏசிபி ஷாருல்நிஸாம் தெரிவித்தார்.
சாலையைப் பயன்படுத்தும் மக்கள், சட்டத் திட்டங்களை மதித்து, பொது ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு ஏசிபி ஷாருல்நிஸாம் அறிவுறுத்தினார்.








