Jun 15, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை சிப்புட் கம்போங் பெங்காலி நிலப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: டத்தோ அ. சிவநேசன் உறுதி
தற்போதைய செய்திகள்

சுங்கை சிப்புட் கம்போங் பெங்காலி நிலப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: டத்தோ அ. சிவநேசன் உறுதி

Share:

பேரா, சுங்கை சிப்புட்டில் உள்ள கம்போங் பெங்காலி கிராமத்தில் சுமார் நூறாண்டு காலமாக நீடித்து வரும் 27 இந்தியக் குடும்பங்களின் நிலப் பிரச்சினைக்கு விரைவில் உரிய நடவடிக்கை மூலம் தீர்வு காணப்பபடும் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

ஈப்போவில் உள்ள இந்திரா மூலியா அரங்கில், மாநில மந்திரி பெசார் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகள் டத்தோ சிவநேசனை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைத்தனர்.

பல ஆண்டு காலமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் இதுவரை எந்தப் பயனும் கிடைக்காத நிலையில், தற்போது இந்த விவகாரம் டத்தோ சிவநேசனின் நேரடி கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய டத்தோ சிவநேசன், "அரசாங்க நிலத்தில் வசித்து வந்த பல இந்தியக் குடும்பங்களின் நிலப் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.

அதே போல், சுங்கை சிப்புட் பகுதியில் இதற்கு முன்பு இருந்த நிலப் பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டுள்ளன. எனவே, கம்போங் பெங்காலி கிராம மக்களின் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கும் விரைவில் நல்லதொரு தீர்வு எட்டப்படும்" என்று டத்தோ சிவநேசன் உறுதியளித்தார்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் கே. மணிமாறனும் உடனிருந்தார்.

Related News

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு

ரோஹிங்கியா அகதிகளை ஏற்காத சரவாக் அரசின் முடிவு மனிதாபிமானமற்றது அல்ல: அமைச்சர் கரீம் விளக்கம்

ரோஹிங்கியா அகதிகளை ஏற்காத சரவாக் அரசின் முடிவு மனிதாபிமானமற்றது அல்ல: அமைச்சர் கரீம் விளக்கம்

அரசு மருத்துவமனைகளில் அந்நியர்களின் மருத்துவ நிலுவைத் தொகை சரிவு: அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி தகவல்

அரசு மருத்துவமனைகளில் அந்நியர்களின் மருத்துவ நிலுவைத் தொகை சரிவு: அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி தகவல்

மக்களைப் பிரித்தாளும் இனவாத அரசியல் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்: பிரதமர் அன்வார் அறிவுறுத்து

மக்களைப் பிரித்தாளும் இனவாத அரசியல் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்: பிரதமர் அன்வார் அறிவுறுத்து