Jan 10, 2026
Thisaigal NewsYouTube
இன்று இரவு வானில் அபூர்வக் காட்சி: பூமிக்கு மிக அருகில் வரும் 'வியாழன்' – மலேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம்  தகவல்!
தற்போதைய செய்திகள்

இன்று இரவு வானில் அபூர்வக் காட்சி: பூமிக்கு மிக அருகில் வரும் 'வியாழன்' – மலேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.10-

வான்வெளி ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு முக்கிய வானியல் நிகழ்வு இன்று ஜனவரி 10 ஆம் தேதி சனிக்கிழமை இரவு அரங்கேறுகிறது.

சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோளான வியாழன், இன்று இரவு மலேசிய வானில் மிகத் தெளிவுடனும், பிரகாசத்துடனும் காட்சி அளிக்கும் என மலேசிய தேசிய விண்வெளி நிறுவனமான ANGKASA அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசிய விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், "வியாழன் கோள் தற்போது பூமிக்கு நேர்க்கோட்டில் மிக நெருக்கமான புள்ளியில் நிலை கொண்டுள்ளது. சுமார் 13 மாதங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்த அரிய நிகழ்வின் போது, சூரியன் மறையும் அதே வேளையில் கிழக்கில் வியாழன் உதயமாவதைக் காணலாம். இன்று இரவு பூமிக்கும் வியாழனுக்கும் இடையே உள்ள தூரம் கணிசமாகக் குறைந்துள்ளதால், வழக்கத்தை விட இது பல மடங்கு பிரகாசமாகத் தெரியும்," என்றனர்.

மலேசியாவின் பிரபல வானியல் நிபுணர்கள் கூறுகையில், "பொதுமக்கள் இன்று இரவு 7:30 மணி முதல் கிழக்குத் திசையில் நிலவுக்கு அருகில் ஒரு பெரிய பொன்னிறப் புள்ளி போலத் தெரியும் வியாழனை வெறும் கண்ணாலேயே ரசிக்கலாம்.

இந்த வானியல் அதிசயத்தை ரசிக்க விரும்புவோர் நகர்ப்புற விளக்குகளின் ஒளி குறைவான இடங்களைத் தேர்வு செய்யுமாறு தேசிய விண்வெளி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. வானம் மேகமூட்டமின்றித் தெளிவாக இருக்கும் பட்சத்தில், இந்த ஒளிப் பிழம்பு அதிகாலை வரை வானில் நிலைத்திருக்கும் என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News