Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இன்று இரவு வானில் அபூர்வக் காட்சி: பூமிக்கு மிக அருகில் வரும் 'வியாழன்' – மலேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம்  தகவல்!
தற்போதைய செய்திகள்

இன்று இரவு வானில் அபூர்வக் காட்சி: பூமிக்கு மிக அருகில் வரும் 'வியாழன்' – மலேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.10-

வான்வெளி ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு முக்கிய வானியல் நிகழ்வு இன்று ஜனவரி 10 ஆம் தேதி சனிக்கிழமை இரவு அரங்கேறுகிறது.

சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோளான வியாழன், இன்று இரவு மலேசிய வானில் மிகத் தெளிவுடனும், பிரகாசத்துடனும் காட்சி அளிக்கும் என மலேசிய தேசிய விண்வெளி நிறுவனமான ANGKASA அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசிய விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், "வியாழன் கோள் தற்போது பூமிக்கு நேர்க்கோட்டில் மிக நெருக்கமான புள்ளியில் நிலை கொண்டுள்ளது. சுமார் 13 மாதங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்த அரிய நிகழ்வின் போது, சூரியன் மறையும் அதே வேளையில் கிழக்கில் வியாழன் உதயமாவதைக் காணலாம். இன்று இரவு பூமிக்கும் வியாழனுக்கும் இடையே உள்ள தூரம் கணிசமாகக் குறைந்துள்ளதால், வழக்கத்தை விட இது பல மடங்கு பிரகாசமாகத் தெரியும்," என்றனர்.

மலேசியாவின் பிரபல வானியல் நிபுணர்கள் கூறுகையில், "பொதுமக்கள் இன்று இரவு 7:30 மணி முதல் கிழக்குத் திசையில் நிலவுக்கு அருகில் ஒரு பெரிய பொன்னிறப் புள்ளி போலத் தெரியும் வியாழனை வெறும் கண்ணாலேயே ரசிக்கலாம்.

இந்த வானியல் அதிசயத்தை ரசிக்க விரும்புவோர் நகர்ப்புற விளக்குகளின் ஒளி குறைவான இடங்களைத் தேர்வு செய்யுமாறு தேசிய விண்வெளி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. வானம் மேகமூட்டமின்றித் தெளிவாக இருக்கும் பட்சத்தில், இந்த ஒளிப் பிழம்பு அதிகாலை வரை வானில் நிலைத்திருக்கும் என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்