நாட்டில் சாலைப் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், 71 விழுக்காடு மக்கள் கடுமையான போக்குவரத்துச் சட்டங்களையும்,75 சதவீதத்தினர் ஓட்டுநர் உரிமம் பெறும் முறையை மேம்படுத்தவும், முறையான சாலைப் பயிற்சித் திட்டங்களைக் கொண்டு வரவும் வலியுறுத்துகின்றனர்.
'இப்சோஸ்' ஆய்வின்படி, மலேசியர்கள் உலகளாவிய சராசரியை விட சாலைப் பாதுகாப்பு குறித்து அதிக கவலையில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, போதை அல்லது மது அருந்தி விபத்து ஏற்படுத்துபவர்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதைச் சட்டத்துறை கட்டாயமாக்கவுள்ளது.
அண்மையில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியவர் மீது 'கொலைக் குற்றம்' சுமத்தப்பட்டது போன்ற கடுமையான நடவடிக்கைகள், ஓட்டுநர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.








