Jun 12, 2026
Thisaigal NewsYouTube
அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

Share:

சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு பயிற்சியின் போது மயங்கி விழுந்த போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

36 வயதான கைரில் இட்ஜார் ரோட்ஸி என்ற அந்த அதிகாரி, டத்தோ அபு பக்கர் பாகிண்டா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், நேற்று அணிவகுப்பு பயிற்சியின் போது, திடீரென மயங்கி விழுந்த அவரைப் பரிசோதித்த மருத்துவ அதிகாரி, அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.

கைரில் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் மற்றும் அவரது மனைவி, கைரில் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Related News