Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கஞ்சாவைக் கடலில் கொட்டி விட்டு தாய்லாந்துக்குத் தப்பி ஓட்டம்
தற்போதைய செய்திகள்

கஞ்சாவைக் கடலில் கொட்டி விட்டு தாய்லாந்துக்குத் தப்பி ஓட்டம்

Share:

கெடா, தஞ்சோங் கெமருங் கடல் பகுதியில் வீசப்பட்ட 3 கிலோ எடை கொண்ட கஞ்சா இலைகளை கெடா, பெர்லிஸ் கடல்சார் மலேசியா கைப்பற்றியது.

9 ஆயிரம் வெள்ளிக்கும் மேலான மதிப்பு கொண்ட 3 கஞ்சா இலை பொட்டலங்கள் அண்டை நாட்டிலிருந்து கடத்தி வர முயற்சிக்கப்பட்டதாக மாநில மாரித்திம் இயக்குநர் கடல்சார் முதல் அட்மிரல், ரோம்லி முஸ்தபா கூறினார்.

சந்தேகிக்கும் படியான நிலையில் தாய்லாந்து கடல் பகுதியில் இருந்து ஒரு படகு இலங்காவி கடல் எல்லைக்குள் நுழைந்ததை மலேசிய கடல்சார் கண்காணிப்பு அமைப்பு வாயிலகத் தெரிய வந்தது.

அந்தத் தகவல் ரோந்துப் படகுகளுக்கு அனுப்பப்பட்டது.
கடல்சார் மலேசியாவின் ரோந்துப் படகுகள் வருவதை உணர்ந்த பிறகு தமது படகில் இருந்த கஞ்சா பொட்டலங்களைக் கடலில் வீசி விட்டு அந்த சந்தேக நபர் மீண்டும் தாய்லாந்து எல்லைக்குத் தப்பி ஓடிவிட்டதாக ரோம்லி முஸ்தபா இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

இவ்வாறான குற்றங்களைக் கையாள கெடா, பெர்லிஸ் கடற்படை சில திட்டங்களை வகுத்துள்ளது. குற்றங்கள் அதிக நாக்க வாய்ப்பிருக்கும் பகுதிகள் தமது தரப்பு எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ரோம்லி முஸ்தபா கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!