கோலாலம்பூர், பிப்ரவரி.22-
சமூக வலைதளங்களில் பரவி வரும் இரமலான் உதவித்தொகை, E-tunai கடன் கோரிக்கைகள் தொடர்பான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று நிதி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது போன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளுடன் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை பொதுமக்கள் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தங்களின் தனிப்பட்ட விவரங்களை அந்நியர்களுடன் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு அமைச்சின் இணையதளம் அல்லது அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களை மட்டுமே அணுகுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








