புத்ராஜெயா, நவ. 12-
மலாயா தலைமை நீதிபதியாக டத்தோஸ்ரீ ஹஸ்னா ஹஷிம் இன்று பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார். புத்ராஜெயா நீதிபரிபாலன கட்டடத்தில் இன்று நடைபெற்ற சடங்கின் போது உயர்நீதிமன்ற முதிர்நிலை நீதிபதி அக்தார் தாஹிர் முன்னிலையில் 14 ஆவது மலாயா தலைமை நீதிபதியாக ஹஸ்னா ஹஷிம் தமது பதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
65 வயது ஹஸ்னா, கடந்த 2010 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டு, 2016 இல் அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று 2019 ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.








