May 4, 2026
Thisaigal NewsYouTube
ஜிஞ்ஜாங்கில் 13 ஏடிஎம் திரைகளை உடைத்த முதியவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஜிஞ்ஜாங்கில் 13 ஏடிஎம் திரைகளை உடைத்த முதியவர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.26-

கோலாலம்பூர், ஜிஞ்ஜாங் பகுதியில் உள்ள மூன்று வங்கிகளில் 13 ஏடிஎம் இயந்திரங்களின் திரைகளை உடைத்துச் சேதப்படுத்தியதாக 67 வயது முதியவர் மீது நான்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது.

வர்ணம் பூசுபவரான லியோங் குவேன் என்ற அந்த முதியவர், நான்கு நீதிமன்றங்களில் தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி, காலை மணி 8 முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு 9.44 மணி வரை, ஒரு கல்லைப் பயன்படுத்தி ஜிஞ்சாங் பகுதியில் 13 ஏடிஎம் திரைகளை உடைத்துச் சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் இரண்டு முன்னணி வங்கிளான Maybank- கிற்கு 45 ஆயிரம் ரிங்கிட்டும், RHB வங்கிக்கு 24 ஆயிரம் ரிங்கிட்டும் இழப்பு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News