May 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் அதிகாலையில் கோர விபத்து: 2 இளைஞர்கள் பலி, 4 பேர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் அதிகாலையில் கோர விபத்து: 2 இளைஞர்கள் பலி, 4 பேர் படுகாயம்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.27-

இன்று அதிகாலை செனாய்–டெசாரு விரைவுச் சாலையில், 3 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானதில், இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயமடைந்தனர்.

காலை 5.37 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 8 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் கமாண்டர் நஸாருடின் யுசோஃப் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தில், 21 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 14 வயதுடைய சிறுமி சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்பு நடவடிக்கையானது அதிகாலை 7.30 மணி வரை நீடித்த நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்