சுங்கை பகாப் , ஜூலை 10-
கடந்த ஜூலை 6 ஆம் நாள் நடந்து முடிந்த சுங்கை பகாப் இடைகால சட்டமன்ற தேர்தலுக்கும் டீசல் விலை உயர்வுக்கும் தொடர்பு இல்லை என பி கே ஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஷி திட்டவட்டமாக கூறி உள்ளார். .
சுங்கை பகாப் இடைகால தேர்தலின் போது 4000 வாக்குகள் கூடுதாக பெற்று பெரிக்கத்தான் நெசனல் வெற்றி பெற்றதற்கு அரசங்கள் டீசல் எண்ணெயின் கட்டணத்தை உயர்த்தியதுதான் காரணம் என தவறான புரிதலைப் பரப்பி வருபவர்களை ரஃபிஷி கடுமையாக சாடினார்.
பக்கத்தான் ஹரப்பானின் தோல்விக்கு முக்கிய காரணம் மலாய்காரர்கள் அல்லாதவர்கள் இடைதேர்தலின் போது வாக்களிக்க வரவில்லை என்பது மட்டுமே என திட்டவட்டமாக கூறினார்.








