Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்தியாவுடன் மாட் சாபு பேச்சுவார்த்தை
தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் மாட் சாபு பேச்சுவார்த்தை

Share:

பச்சரிசை ஏற்றுமதியை தடை செய்து இருக்கும் இந்தியாவின் முடிவு தொடர்பாக அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக முகமட் சாபு குறிப்பிட்டார். பச்சரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கும் இந்தியாவின் முடிவு மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

இன்று தெலுக் இந்தானில் உள்ள ஃபெல்க்ரா வின் நெல் உற்பத்தி ஆலைக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் முகமட் சாபு இதனை குறிப்பிட்டுள்ளார்.

பச்சரிசி ஏற்றுமதியை இந்தியா முற்றாக தடை விதிக்குமானால் பொருட்களின் விலை ஏற்றம் காண்பதற்கான அபாயத்தையும் முகமட் சாபு விளக்கியதாக தெரிவித்துள்ளார்.

Related News