ஜன.11-
நேற்று மலேசியாவில் புதிய Mpox எனப்படுன் குரங்கம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். இதன் மூலம் 2023 ஜூலை முதல் , நாட்டில் மொத்த குரங்கம்மை நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து நோயாளிகளும் 2ஆம் நிலையைச் சேர்ந்தவர்கள்.
கண்டறியப்பட்ட புதிய நோயாளி 24 வயதான ஆடவர். இவர் வெளிநாடு சென்று வந்தவர். தற்போது அவர் உடல் நிலைமை சீராக ல் உள்ளது. சுகாதார அமைச்சு குரங்கம்மை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் சுகாதார அமைச்சின் சமூக ஊடக கணக்கின் மூலம் அதிகாரப்பூர்வத் தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.







