Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஏரோடிரேன் கோளாறு மிகவும் அவமானகரமான சம்பவம் - போக்குவரத்து அமைச்சர் கருத்து!
தற்போதைய செய்திகள்

ஏரோடிரேன் கோளாறு மிகவும் அவமானகரமான சம்பவம் - போக்குவரத்து அமைச்சர் கருத்து!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.30-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள ஏரோடிரேன் ரயில் சேவை மீண்டும் பழுதடைந்த சம்பவம் குறித்து, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கடும் அதிருப்தியையும், அவமானத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட கோளாறினால், பயணிகள் தங்கள் பயணப் பைகளை இழுத்துக் கொண்டு ரயில் பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது மிகுந்த அவமானகரமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள அந்தோணி லோக், மக்களின் ஏமாற்றத்தைத் தானும் உணர்ந்ததாக நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை நான் உறுதிச் செய்வேன். இது புதிய ரயில் முறை என்ற போதிலும் எதிர்பார்த்தத் தரமான சேவையை வழங்கத் தவறியதற்காக இதற்குப் பொறுப்பேற்கும்படி சம்பந்தப்பட்ட குத்தகையாளரை மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அந்தோணி லோக் வலியுறுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை