May 27, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல்களை காவல் துறையினர் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல்களை காவல் துறையினர் கைது செய்தனர்

Share:

டிச. 30-

கோலாலம்பூரில் நடத்தப்பட்ட Op Lejang சோதனை நடவடிக்கையில் Geng Awey , Geng Alep ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல்களை காவல் துறையினர் கைது செய்தனர். Geng Awey கும்பலைச் சேர்ந்த 5 பேரும் Geng Alep கும்பலைச் சேர்ந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக Wangsa Maju மாவட்டக் காவல் துறைத் தலைவர் Asisten Komisioner Mohamad Lazim Ismail தகவல் வெளியிட்டார்.

விசாரணையில், இந்த கும்பல்கள் பூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பூட்டை உடைத்து அவற்றை திருடி, பின்னர் அவற்றை சட்டவிரோத பட்டறைகளில் பிரித்து உதிரி பாகங்களாக விற்றது தெரியவந்தது. முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இந்த உதிரி பாகங்கள் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 28 ஆயிரம் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில், ரஷ்ய சுற்றுலாப் பயணியை கொள்ளையடித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் காஜாங் சிறையிலிருந்து சமீபத்தில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 10 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமாகும்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது..

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு