Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பண்டார் உத்தாமா மாணவி கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட மாணவர் விசாரணைக்குத் தகுதி பெற்றார்
தற்போதைய செய்திகள்

பண்டார் உத்தாமா மாணவி கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட மாணவர் விசாரணைக்குத் தகுதி பெற்றார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.17-

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது மாணவர், விசாரணைக்கு ஏற்புடையவர் என மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பேரா மாநிலம், பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அளித்த சான்றிதலின் படி, தனது கட்சிக்காரர் நீதிமன்ற விசாரணைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் ஏற்புடையவராகக் கருதப்படுகின்றார் என அம்மாணவரின் வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிமன்ற விசாரணையின் போது, அம்மாணவர் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் கிட்சன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட அந்த மாணவர், சிலாங்கூர் புஞ்சாக் அலாமில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே வேளையில், மாதம் ஒருமுறை மனநல சிகிச்சைக்காக அவர் பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வழக்கில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி, மேல் விசாரணை தொடரவுள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்