கிள்ளான், பெர்சியாரான் சுல்தான் இப்ராஹிம்மில் மூன்று வாகனங்கள் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இன்று காலை 6.23 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு தம் குழுவினரோடு விரைந்ததாக சுங்ஙாய் பினாங்கு தீயணைப்பு, மீட்பு படையினர் தெரிவித்தனர்.
வாகனத்தில் பயணித்த 5 பேர் கடும் காயங்களுக்கு உட்பட்ட வேளையில், இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சுகாதார அதிகாரி கூறினார்.








