May 6, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் அரசு புக்கிட் தகார் பன்றி பண்ணைத் திட்டத்தை ரத்து செய்தது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் அரசு புக்கிட் தகார் பன்றி பண்ணைத் திட்டத்தை ரத்து செய்தது

Share:

ஷா ஆலாம், ஜனவரி.26-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆலோசனையைத் தொடர்ந்து, உலு சிலாங்கூர், புக்கிட் தகாரில் பன்றி வளர்ப்புத் தொழிலை மையப்படுத்தும் திட்டத்தைச் சிலாங்கூர் அரசு ரத்து செய்துள்ளது.

இத்திட்டத்திற்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, கடந்த வாரம் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், இந்தத் திட்டத்தை ரத்து செய்ய அறிவுறுத்துவதற்கு முன்பே, புக்கிட் தகாருக்கு பதிலாக மாற்று இடத்தைத் தேடுமாறு மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயக் குழுத் தலைவர் இஷாம் ஹாஷிமுக்கு மாநில நிர்வாகக் குழு உத்தரவிட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், உள்ளூர் சமூகத்தினரிடையே அமைதியின்மையை உருவாக்கும் என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

முன்னதாக, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்களும் இத்திட்டம் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்