Jan 26, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் அரசு புக்கிட் தகார் பன்றி பண்ணைத் திட்டத்தை ரத்து செய்தது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் அரசு புக்கிட் தகார் பன்றி பண்ணைத் திட்டத்தை ரத்து செய்தது

Share:

ஷா ஆலாம், ஜனவரி.26-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆலோசனையைத் தொடர்ந்து, உலு சிலாங்கூர், புக்கிட் தகாரில் பன்றி வளர்ப்புத் தொழிலை மையப்படுத்தும் திட்டத்தைச் சிலாங்கூர் அரசு ரத்து செய்துள்ளது.

இத்திட்டத்திற்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, கடந்த வாரம் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், இந்தத் திட்டத்தை ரத்து செய்ய அறிவுறுத்துவதற்கு முன்பே, புக்கிட் தகாருக்கு பதிலாக மாற்று இடத்தைத் தேடுமாறு மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயக் குழுத் தலைவர் இஷாம் ஹாஷிமுக்கு மாநில நிர்வாகக் குழு உத்தரவிட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், உள்ளூர் சமூகத்தினரிடையே அமைதியின்மையை உருவாக்கும் என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

முன்னதாக, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்களும் இத்திட்டம் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

நில ஆக்கிரமிப்பு உள்ளது, ஆனால் 'சட்டவிரோதக் கோயில்' என முத்திரை குத்த வேண்டாம்

நில ஆக்கிரமிப்பு உள்ளது, ஆனால் 'சட்டவிரோதக் கோயில்' என முத்திரை குத்த வேண்டாம்

சிகரெட் துண்டை வீசிய இந்தோனேசியருக்கு 300 ரிங்கிட் அபராதம் மற்றும் 6 மணி நேரச் சமூகச் சேவை

சிகரெட் துண்டை வீசிய இந்தோனேசியருக்கு 300 ரிங்கிட் அபராதம் மற்றும் 6 மணி நேரச் சமூகச் சேவை

கடற்படை உயர் அதிகாரி மீதான ஊழல் விசாரணை: 21 வங்கிக் கணக்குகள், விடுதிகள் முடக்கம்

கடற்படை உயர் அதிகாரி மீதான ஊழல் விசாரணை: 21 வங்கிக் கணக்குகள், விடுதிகள் முடக்கம்

நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை காலத்தை 6 நிமிடங்களாகக் குறைக்கிறது வானிலை ஆய்வு மையம்

நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை காலத்தை 6 நிமிடங்களாகக் குறைக்கிறது வானிலை ஆய்வு மையம்

மலாக்காவில் களைகட்டும் சீனப் புத்தாண்டு: பாபா நியோன்யா உணவுகளுக்குக் குவியும் மவுசு

மலாக்காவில் களைகட்டும் சீனப் புத்தாண்டு: பாபா நியோன்யா உணவுகளுக்குக் குவியும் மவுசு

சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் 5  ஆயிரம் ரிங்கிட்  பெற்றதாக முன்னாள் ராணுவத் தளபதியின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டது

சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் 5 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாக முன்னாள் ராணுவத் தளபதியின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டது