May 26, 2026
Thisaigal NewsYouTube
நண்பர்களுக்குள் கைகலப்பு : மூவருக்கு வெட்டுக்காயம் : ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

நண்பர்களுக்குள் கைகலப்பு : மூவருக்கு வெட்டுக்காயம் : ஐவர் கைது

Share:

கோலாலம்பூர், டிச. 17-


கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் யாப் குவான் செங்கில் உள்ள ஒரு கேளிக்கை மையம் ஒன்றுக்கு வெளியே இந்திய இளைஞர்கள் சம்பந்தப்பட்ட சண்டை தொடர்பில் போலீசார் ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

நண்பர்களுக்கு இடையிலான இந்த சண்டையில் ஒருவர் பேனாக்கத்தியை பயன்படுத்தி, தாக்குதலில் ஈடுபட்டதால் மூவர் காயம் அடைந்தனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுலிஸ்மி அப்பெண்டி சுலைமான் தெரிவித்தார்.

முதலாவது நபருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நபருக்கு முகத்திலும், புருவத்திலும், உதட்டிலும் காயம் ஏற்பட்டுள்ள வேளையில் மூன்றாவது நபருக்கு தலையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டு பத்து தையல்கள் போடப்பட்டுள்ளதாக சுலிஸ்மி அப்பெண்டி குறிப்பிட்டார்.

மூவரும் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துவேறு, பின்னர் அந்த நைட் கிளப்பின் வெளி வளாகம் வரை நீடித்து கைகலப்பில் முடிந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 22 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட பேனாக் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த ஐவரும் குற்றவியல் சட்டம் 236 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுலிஸ்மி அப்பெண்டி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு