ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும் நீண்டகால ஒப்பந்தமானது எதிர்வரும் புதன்கிழமைக்குள் எட்டப்படாவிட்டால், தற்போதைய போர்நிறுத்தமானது நீட்டிக்கப்படாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில் ஈரான் மீது விதிக்கப்பட்ட துறைமுக மறுப்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரிசோனாவின் பீனிக்ஸ் நகரிலிருந்து வாஷிங்டன் நோக்கி பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போர் நிறுத்தமானது நீட்டிக்க முடியாத நிலை ஏற்பட்டால் மீண்டும் குண்டுவீச்சுகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் துறைமுக மறுப்பு தொடர்ந்து நீட்டிக்கும் பட்சத்தில், ஹார்முஸ் நீரிணை முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.








