ஷா அலாம்,ஜன.9
சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை, சட்டப்பூர்வத் தொழிலாளர்களாக பதிவு செய்து கொள்வதற்கு உள்துறை அமைச்சும், மலேசிய குடிநுழைவுத்துறையும் தொடங்கிய இரண்டாவது மறு கட்டமைப்பு பதிவுத் திட்டமான RTK 2.0, அனைத்து துறைகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சட்டவிரோதத் தொழிலாளர்களை பதிவு செய்து கொண்டுள்ள முதலாளிமார்கள், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் சட்டபூர்வத் தொழிலாளர்கள் என்பதற்கான ஸ்டிக்கர்களை பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, தங்கள் பதிவை சரிபார்த்துக்கொள்வதற்கும் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறும் முதலாளிமார்கள் மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவர்களுக்கு எந்த தயவு தாட்சனையும், சலுகையும் காட்டப்படாது என்று அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.








