Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி சிற்றுண்டி சாலையை 14 நாட்களுக்கு மூடுதற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

பள்ளி சிற்றுண்டி சாலையை 14 நாட்களுக்கு மூடுதற்கு உத்தரவு

Share:

ஈப்போ , செப்டம்பர் 26-

விஷக்கிருமி கலந்த உணவை உட்கொண்டு வாந்தி, வயிற்றப்போக்கிற்கு ஆளான ஈப்போ, செபோர் - தேசிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை வரை பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 86 ஆக இருந்த வேளையில் அந்த எண்ணிக்கை இன்று காலையில் 101 ஆக உயர்ந்துள்ளது என்று பேரா மாநில சுகாதார, இந்தியர்கள் விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 101 மாணவர்களில் 50 பேர் பெண்கள் என்றும் 51 பேர் ஆண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இவர்களில் ஒருவர் மட்டும் ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

பள்ளி சிற்றுண்டி சாலையில் பொறிக்கப்பட்ட கோழி மற்றும் சுவை பானத்தில் விஷத்தன்மை கலந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பள்ளி சிற்றுண்டி சாலையை அடுத்த 14 நாட்களுக்கு மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக சிவநேசன் குறிப்பட்டார்

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்