Jul 2, 2026
Thisaigal NewsYouTube
அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி
தற்போதைய செய்திகள்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

Share:

அலோர் ஸ்டார் அருகே உள்ள பெக்கான் சிம்பாங் குவாலா பகுதியில் 14 வயது மாணவியை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 8.26 மணியளவில் நடந்ததாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சையத் பஸ்ரி சையத் அலி தெரிவித்துள்ளார்.

நேற்று அம்மாணவி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், மாணவின் முகத்தை கையால் மூடி பிடித்துக் கொண்டு இழுத்துச் செல்ல முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், அம்மாணவி தைரியமாக சந்தேக நபரின் கையைக் கடித்து தப்பித்து ஓடி அருகிலிருந்த டியூஷன் மையத்தில் புகலிடம் தேடி உதவி கேட்டுள்ளார்.

இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக அம்மாணவி இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 363, பிரிவு 511 மற்றும் 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டம் பிரிவு 14-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு