Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் உதவி: அமைச்சரவை விவாதிக்கும்
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் உதவி: அமைச்சரவை விவாதிக்கும்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் கூடுதல் உதவிகள் வழங்குவது குறித்து அரசாங்கம் விவாதிக்கவிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று கோத்தா ராஜா எம்.பி.யான முகமட் சாபு குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் ரொக்க உதவியும், சேதமுற்ற வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

சேதமுற்ற வீடுகள் சீர்படுத்திக் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்த நிலையில், மேலும் எத்தகைய உதவிகள் வழங்குவது என்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று முகமட் சாபு குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி