Jul 5, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் யாரும் மூழ்கவில்லை: ஜோகூர் தீயணைப்புத்துறை உறுதி!
தற்போதைய செய்திகள்

விபத்தில் யாரும் மூழ்கவில்லை: ஜோகூர் தீயணைப்புத்துறை உறுதி!

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.13-

நேற்றிரவு ஜோகூர், ஜாலான் பாஸார் காராட் பகுதியில் நடந்த இரு மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆற்றில் விழுந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்பட்ட நிலையில், அவ்வாறு யாரும் மரணிக்கவில்லை என ஜோகூர் தீயணைப்பு - மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஜோகூர் பாரு மாநகராட்சி மன்றம், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், விபத்தின் தாக்கத்தால் ஒருவர் மட்டுமே தூக்கி எறியப்பட்டார், ஆனால் ஆற்றில் விழவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

அந்த நபர் உட்பட, விபத்தில் பாதிக்கப்பட்ட மூவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். முதலில் ஆற்றில் ஒருவர் விழுந்திருக்கலாம் என்ற தகவலின் பேரில் 30 மீட்டர் தூரத்திற்கும் 12 அடி ஆழத்திலும் மூன்று முறை மூழ்கித் தேடும் பணி நடத்தப்பட்டது. ஆனால் யாரும் கண்டெடுக்கப்படாததால் அதிகாலை 1:14 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது