May 26, 2026
Thisaigal NewsYouTube
தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

Share:

தைப்பிங் சிறைச்சாலையில் கைதிகள் மீதான அத்துமீறல்கள் குறித்த மனித உரிமை ஆணையமான சுஹாகம் அறிக்கை, அதிர்ச்சியளிப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

கைவிலங்கிடப்பட்ட கைதிகள் மீது மிதமிஞ்சிய வன்முறை, மிளகாய்த்தூள் தெளிப்பு மற்றும் மருத்துவப் பதிவுகளை போலியாக தயாரித்தது போன்ற காரணங்களால் ‘கான் சின் எங்’ என்ற கைதி மரணமடைந்ததுடன், 100-க்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்துள்ளனர் என சுஹாகாம் அறிக்கை கூறுகிறது.

2025 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த இச்சம்பவம் குறித்து போலீஸ் துறை எத்தனை புகார்களைப் பதிவு செய்துள்ளது, சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஐஜிபி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

மேலும், கைதியின் மரணத்திற்கு காரணமான அதிகாரி மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சட்டத்துறை தலைவரும் விளக்கமளிக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் கேட்டுக்கொண்டார்.

சிறைச்சாலைகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல என்றும், கைதிகளுக்கும் மனித உரிமைகள் உண்டு என்றும் குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் குறித்து அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பேசவிருப்பதாக கோபிந்த் சிங் உறுதியளித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு