Mar 24, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:
 Foto hiasan/ihsan Prevention

கோலாலம்பூர் , ஜுலை 19-

நாட்டில் மூன்றாவது முதல் நான்காவது படிநிலை வரை உள்ள புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் 63.7 விழுக்காட்டினராக இருந்த இந்நிலையைச் சேர்ந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் 65.7 விழுக்காடாக அதிரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் மலேசியாவில் நான்காவது ஆட்கொல்லி நோயாளியாக வகைப்படுத்தப்பட்ட புற்று நோய், தற்போது மூன்றாவது ஆட்கொல்லி நோயாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு வரையில் 15,200 புற்று நோயாளிகள் மூன்றாவது மற்றும் நான்காவது படிநிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News