May 6, 2026
Thisaigal NewsYouTube
நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வேன் தீப்பிடித்ததில் ஓட்டுநர் உடல் கருகி பலி
தற்போதைய செய்திகள்

நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வேன் தீப்பிடித்ததில் ஓட்டுநர் உடல் கருகி பலி

Share:

கோல கங்சார், ஜனவரி.25-

பேராக், மனோங் பகுதியில் உள்ள கம்போங் பத்து 40 லெம்பூர் என்ற இடத்தில் நேற்று நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் வேன் ஓட்டுநர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

இன்று மாலை 3.16 மணியளவில் கோல கங்சார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு இந்த விபத்து குறித்த அவசர அழைப்பு கிடைத்ததாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 32 வயது ஓட்டுநர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு வாகனங்கள் மோதிக் கொண்ட அந்த விபத்தில், அவர் ஓட்டி வந்த நிசான் வேனெட் (Nissan Vannette) ரக வேன் தீப்பிடித்துக் கொண்டதால் வாகனத்திலிருந்து வெளியேற முடியாமல் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உடல் கருகி மாண்டார்.

வேனில் பயணித்த 16 வயது சிறுவனும், 19 வயது பெண்ணும் பொதுமக்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று அப்பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்