ஜோகூர், செனாய் விமான நிலையம், அனைத்துலக வழித்தடங்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு வழித்தடங்களுக்கான முதலாவது ஏர் ஆசியா விமானம், சீனா, குவாங்சூவிலிருந்து செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று காலை 6.55 மணியளவில் தரையிறங்கியது.
அந்த விமான நிலையத்தை நிர்வகித்து வரும் செனாய் ஏர்போர்ட் டெர்மினல் சர்வீஸ் நிறுவனம், பயணிகளுக்கு உற்காசம் மிகுந்த மகத்தான வரவேற்பபை நல்கியது.
ஜோகூர் மாநில அரசு சார்பில் அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் கே. ரவின் குமார் மற்றும் மாநில சுற்றுலா வாரியத்தின் பிரதிநிதிகள், பயணிகளை இன்முகத்துடன் வரவேற்றனர்.
சீனா,குவாங்சூவிலிருந்து ஜோகூர் பாருவிற்கான இந்த வழிநில்லா பயணத்தில், எ.கே 1395 என்ற விமானம் 110 பயணிகளுடன் செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதாக விமான நிலைய தலைமை செயல்முறை அதிகாரி கென்னடி ஆயு தெரிவித்துள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


