ஜோகூர், செனாய் விமான நிலையம், அனைத்துலக வழித்தடங்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு வழித்தடங்களுக்கான முதலாவது ஏர் ஆசியா விமானம், சீனா, குவாங்சூவிலிருந்து செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று காலை 6.55 மணியளவில் தரையிறங்கியது.
அந்த விமான நிலையத்தை நிர்வகித்து வரும் செனாய் ஏர்போர்ட் டெர்மினல் சர்வீஸ் நிறுவனம், பயணிகளுக்கு உற்காசம் மிகுந்த மகத்தான வரவேற்பபை நல்கியது.
ஜோகூர் மாநில அரசு சார்பில் அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் கே. ரவின் குமார் மற்றும் மாநில சுற்றுலா வாரியத்தின் பிரதிநிதிகள், பயணிகளை இன்முகத்துடன் வரவேற்றனர்.
சீனா,குவாங்சூவிலிருந்து ஜோகூர் பாருவிற்கான இந்த வழிநில்லா பயணத்தில், எ.கே 1395 என்ற விமானம் 110 பயணிகளுடன் செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதாக விமான நிலைய தலைமை செயல்முறை அதிகாரி கென்னடி ஆயு தெரிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


