கோலாலம்பூர், ஜூன்.17-
இன்று காலையில் மரணம் அடைந்த மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ஜி. பழனிவேலுவின் உடலை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையிலிருந்து அவரின் துணைவியார் புவான்ஸ்ரீ கனகம் பழனிவேலும் , குடும்பத்தாரும் பெற்றுக் கொண்டனர்.
மாலை 6 மணியளவில் குடும்ப உறுப்பினர்களுடன் மருத்துவமனையின் சவக் கிடங்கிற்கு வந்த புவான்ஸ்ரீ கனகம், பங்சாரில் உள்ள தங்கள் இல்லத்திற்கு கணவர் பழனிவேலின் உடலை வாகனத்தில் அனுப்பி வைத்து விட்டு, மருத்துவமனையிலிருந்து குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பினார்.








