மாது ஒருவர், வீட்டின் படிகட்டில் சில தனிநபர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட காட்சியை கொண்ட காணொளி ஒன்று சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பினாங்கு தீமோர் லவூட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சொஃபியான் சந்தோங் தெரிவித்துள்ளார். 39 விநாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி நேற்று நள்ளிரவு விமான் விமான் என்ற பெயரில் முகநூல் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருவதாக சொஃபியான் சந்தோங் சுட்டிக்காட்டினார். இச்சம்பவம் தொடர்பில் 51 வயது நபர் போலீசில் புகார் செய்துள்ளார். தாக்கப்பட்ட நபர்,தமது மகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டை விட்டு சென்றவர், பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை என்றும், நீண்ட இடைவெளிக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய போது இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்றும் அந்த நபர் தமது போலீசில் புகாரில் தெரிவித்துள்ளார் என்றும் ஏசிபி சொஃபியான் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


