May 6, 2026
Thisaigal NewsYouTube
ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியரிடம் பண மோசடி: ஹஜ் யாத்திரை சேமிப்பு நிதி உட்பட 88 ஆயிரத்தை இழந்தார்
தற்போதைய செய்திகள்

ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியரிடம் பண மோசடி: ஹஜ் யாத்திரை சேமிப்பு நிதி உட்பட 88 ஆயிரத்தை இழந்தார்

Share:

கோல திரங்கானு, டிசம்பர்.20-

ஓய்வு பெற்ற அரசாங்கம் ஊழியர் ஒருவர், தனது ஹஜ் யாத்திரைக்கான சேமிப்பு மற்றும் மனைவியின் சேமிப்பு நிதி உள்ளிட்ட 88 ஆயிரம் ரிங்கிட்டை தொலைபேசி மோசடி ஒன்றில் இழந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி, 75 வயதான அந்த முதியவருக்கு, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்திலிருந்து அழைப்பதாக மோசடி தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமட் நோர் தெரிவித்துள்ளார்.

அத்தொலைப்பேசி அழைப்பில் பேசிய ஆடவர் ஒருவர், தான் ஒரு போலீஸ்காரர் என்று கூறிக் கொண்டு, சம்பந்தப்பட்டவருக்கு எதிராக மோசடிப் புகார்கள் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அந்த 75 வயது முதியவர், அந்த நபரை நம்பி 88 ஆயிரம் ரிங்கிட்டை அவர் கூறிய வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் அஸ்லி முகமட் நோர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பணப் பரிமாற்றம் செய்த பின்னரே, இது ஒரு மோசடி வலை என்று அவருக்குத் தெரிய வந்துள்ளது.

இது போன்ற மோசடிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை அஸ்லி முகமட் நோர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்