Aug 6, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்தனர்

Share:

ஜாசின், டிச. 26-


வடக்கு தெற்கு நெடுஞ்சாலைலயின் 187.6 ஆவது கிலோமீட்டர், மலாக்கா, ஜாசின் அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் மலாக்கா மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இன்று காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பெரோடுவா மை காரில் பயணம் செய்த 19 மற்றும் 21 வயதுடைய இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் ஜாமில் ராட்ஷி தெரிவித்தார்.

இந்த விபத்தில் முன் இருக்கையிலும் பின்இருக்கையிலும் அமர்ந்திருந்த மேலும் இரண்டு பயணிகள் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News