Apr 24, 2026
Thisaigal NewsYouTube
தமிழக சட்டமன்ற தேர்தல்: 84% மேற்பட்ட வாக்குப்பதிவு – அமைதியான முறையில் நிறைவு
தற்போதைய செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்: 84% மேற்பட்ட வாக்குப்பதிவு – அமைதியான முறையில் நிறைவு

Share:

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கி, மாநிலம் முழுவதும் அமைதியாகவும் சீராகவும் நடைபெற்றது.

வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

பெண்கள், முதியவர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களித்த இளைஞர்களின் பங்கேற்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் சுமார் 70% வாக்குகள் பதிவாகியிருந்தன.

மாலை 5 மணி அளவில் இது 82.24% ஆக உயர்ந்தது.

இந்நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி, முதற்கட்ட கணக்கீட்டின் படி சுமார் 84.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களை விட, இந்த முறை அதிக வாக்குப்பதிவு பதிவாகி வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

போலீஸ் படைத் தலைவருக்கு எதிரான இந்திரா காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு / நீதி நிலைநாட்டப்படும் என இந்திரா நம்பிக்கை

போலீஸ் படைத் தலைவருக்கு எதிரான இந்திரா காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு / நீதி நிலைநாட்டப்படும் என இந்திரா நம்பிக்கை

 மேக விதைப்பு நடவடிக்கையால் மலாக்கா, ஜோகூர் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

மேக விதைப்பு நடவடிக்கையால் மலாக்கா, ஜோகூர் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

கிள்ளான் வீட்டில் வெளிநாட்டு ஆண் சடலம் – வெளிநாட்டு பெண் கைது

கிள்ளான் வீட்டில் வெளிநாட்டு ஆண் சடலம் – வெளிநாட்டு பெண் கைது

என்ஜிஓ தொடர்புகள் குறித்து அறிவிக்க எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

என்ஜிஓ தொடர்புகள் குறித்து அறிவிக்க எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

கிளந்தானில் தந்தை மரணம் தொடர்பாக கைது செய்யப்படட மகனுக்கு மனநல பாதிப்பு - போலீஸ் உறுதி

கிளந்தானில் தந்தை மரணம் தொடர்பாக கைது செய்யப்படட மகனுக்கு மனநல பாதிப்பு - போலீஸ் உறுதி

சுக்மா போட்டி திட்டமிட்டபடி ஆகஸ்டில் நடத்தப்பட வேண்டும் – சரவாக் அரசு வலியுறுத்தல்

சுக்மா போட்டி திட்டமிட்டபடி ஆகஸ்டில் நடத்தப்பட வேண்டும் – சரவாக் அரசு வலியுறுத்தல்