Jul 4, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன வெளிநாட்டு மாணவன் பிணமாகக் கிடந்தார்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன வெளிநாட்டு மாணவன் பிணமாகக் கிடந்தார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.17-

கடந்த வாரம் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த கோலாலம்பூர் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவன் ஒருவன், தாம் தங்கியிருந்த செராஸில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் 26 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.

கடுமையானக் காயங்களுக்கு ஆளான அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அய்டில் போல்ஹசான் தெரிவித்தார்.

செராஸ், தாமான் கோனோட்டில் அங்காசா கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவின்படி கடந்த ஜுலை 9 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிய வந்துள்ளது.

ஒரு மியன்மார் பிரஜையான அந்த மாணவன் இறப்பு குறித்து தகவல் கிடைத்து நேற்று கோலாலம்பூர் வந்து சேர்ந்த ஒரு வர்த்தகரான அந்த மாணவனின் தந்தை, துவாங்கு மூரிஸ் மருத்துவமனையின் சவக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அந்த மாணவனின் சடலத்தை அடையாளம் காட்டினார்.

சவப் பரிசோதனைக்குப் பிறகு அந்த மாணவனின் உடல் வரும் ஜுலை 22 ஆம் தேதி மியன்மாருக்குக் கொண்டுச் செல்வற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

காணாமல் போன வெளிநாட்டு மாணவன் பிணமாகக் கிடந்தார் | Thisaigal News