Jun 12, 2026
Thisaigal NewsYouTube
பெக்கான் நானாஸ்: கடும் சூறாவளியால் 28 வீடுகள் சேதம்; பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

பெக்கான் நானாஸ்: கடும் சூறாவளியால் 28 வீடுகள் சேதம்; பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Share:

பொந்தியான், மே.03-

ஜோகூர், பொந்தியான் மாவட்டத்தில் உள்ள Kampung Melayu Raya Rizab 1 பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் குறைந்தது 28 வீடுகள் பலத்த சேதமடைந்தன. மாலை 4 மணியளவில் பலத்த மழையுடன் வீசிய சூறாவளியால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்த நிலையில், தகவல் அறிந்து வந்த ஒன்பது தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த இயற்கைச் சீற்றத்தில் வீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், குடியிருப்புவாசிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியதாக ஜோகூர் மாநிலத் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீரடைந்து வரும் வேளையில், சீரற்ற வானிலை நிலவும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News