Mar 17, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 27 -

15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு நன்றி தெரிவிக்கும் தமது உரையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மாலை நேரத்திற்கு ஒத்திவைத்ததற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றக்கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நாடாளுமன்றக்கூட்டத் தொடர் தொடங்கிய போதே மாமன்னருக்கு நன்றி தெரிவிக்கும் உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்தியிருக்க வேண்டும். காலையில் நிகழ்த்த வேண்டிய உரையை மாலையில் நிகழ்ந்துவதற்கு பிரதமர் முற்படுவது நாடாளுமன்றம் இதுவரை கண்டிராத நடைமுறையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா சைனுடின் ஆட்சேபம் தெரிவித்தார்.

மாமன்னருக்கு நன்றி தெரிவிக்கும் உரையை பிரதமர் ஆற்றியப் பின்னரே அடுத்த கட்ட நிகழ்வுக்கு சென்று இருக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் லாருட் எம்.பி.யான ஹம்ஸா ஜைனுதீன் குறிப்பிட்டார்.

எனினும் இதற்கு விளக்கம் அளித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று காலையில் கம்போடியா பிரதமர் ஹன் மனெட் மலேசியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார். அவரை வரவேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்ததால் மாமன்னருக்கு நன்றி தெரிவிக்கும் உரை நிகழ்வை மாலை நேரத்தித்றகு மாற்றப்பப்பட்டதாக விளக்கம் தந்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு