Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பெண் ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

பெண் ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக்காவல்

Share:

கோலா திரங்கானு,அக்டோபர் 10-

திரெங்கானு, டுங்குனில் உள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களை வாகனத்தினால் மோதி, மூவருக்கு மரணம் விளைவித்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் ஓட்டுநர் ஒருவருக்கு நான்கு நாள் தடுப்புக்காவல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

49 வயதுடைய அந்த பெண் ஓட்டுநர், இன்று காலையில் கோலத்திரெங்கானு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நூர் அமிரா பாத்திஹா ஒஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் அக்டோபர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற அனுமதியைப் பெற்றனர்.

நேற்று இரவு 8 மணியளவில் திரெங்கானு, டுங்குன் – னில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் சம்பந்தப்பட்ட மாது செலுத்தியதாக நம்பப்படும் SUV வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளோட்டிகளையும், பாதசாரிகளையும் மோதியது.

இதில் அந்தப் பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் உயிரிழந்த வேளையில் மேலும் ஒரு மாணவன் கடும் காயங்களுக்கு ஆளானான்.

மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான அந்த மாது, மனோரீதியில் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு