May 18, 2026
Thisaigal NewsYouTube
1.12 மில்லியன் தொழிலாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

1.12 மில்லியன் தொழிலாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூலை.01-

நாட்டில் கிக் (GIG) தொழில் துறையைச் சார்ந்துள்ள 1.12 மில்லியன் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா ஒன்றை அரசாங்கம் தாக்கல் செய்யவிருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.


கிக் தொழில்துறையில் தளத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் தளமின்றி பணியாற்றி வரும் தொழிலாளர்கள் என இரு பிரிவு தொழிலாளர்களின் நலனையும் இந்த உத்தேசச் சட்ட மசோதா உள்ளடக்கியிருக்கும் என்று டத்தோஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் குறிப்பிட்டார்.

கிக் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக தனியொரு சட்டம் இருப்பது மிக அவசியமாகும். இந்த உத்தேசச் சட்ட மசோதா தொடர்பாக பல்வேறு அமைச்சுகளின் பிரதிநிதிகள், நாடு முழுவதும் உள்ள கிக் தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துடையாடல் வழி சேகரிக்கப்பட்ட யோசனைகள் இந்த உத்தேசச் சட்ட மசோதாவில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று துணைப்பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி