தமது காதல் நிராகரிக்கப்பட்டதை அறிந்த நபர் ஒருவர், விரக்தியினால் தமது காதலி வேலை செய்து வந்த கடைக்கு தீயிட்டு, ஆவேசமாக நடந்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை தெலுக் இந்தான், லங்காப், ஜாலான் பெசாரில் நிகழ்ந்தது. மது போதையில் இருந்ததாக நம்பப்படும் 54 வயதுடைய நபர், அந்தக் கைப்பேசி கடையில் வேலை செய்து வந்த 46 வயதுடைய தமது காதலியிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்த இந்த நாச வேலையைச் செய்துள்ளார் என்று ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்துள்ளார்.
இத்தீயினால் அந்தக் கைப்பேசி கடையில் சுமார் ஒரு லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்கள் அழிந்துள்ள வேளையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டள்ளார் என்று அமாட் அட்னான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


