தமது காதல் நிராகரிக்கப்பட்டதை அறிந்த நபர் ஒருவர், விரக்தியினால் தமது காதலி வேலை செய்து வந்த கடைக்கு தீயிட்டு, ஆவேசமாக நடந்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை தெலுக் இந்தான், லங்காப், ஜாலான் பெசாரில் நிகழ்ந்தது. மது போதையில் இருந்ததாக நம்பப்படும் 54 வயதுடைய நபர், அந்தக் கைப்பேசி கடையில் வேலை செய்து வந்த 46 வயதுடைய தமது காதலியிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்த இந்த நாச வேலையைச் செய்துள்ளார் என்று ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்துள்ளார்.
இத்தீயினால் அந்தக் கைப்பேசி கடையில் சுமார் ஒரு லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்கள் அழிந்துள்ள வேளையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டள்ளார் என்று அமாட் அட்னான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


