நவ. 23-
ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான் பெரிய பாலத்தின் தரம் மேம்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
அந்த பழமைவாய்ந்த பாலத்தில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு 4 கோடியே 90 லட்சம் வெள்ளி செலவில் அந்தப்பாலம் மேம்படுத்தப்படும் என்று துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கான சீரமைப்புப்பணி அடுத்த ஆண்டு மத்தியப் பகுதியில் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.








