சிப்பாங், ஜன - 8,
மில்லியன் கணக்கான அரசாங்க நிதி கையாடல் விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமரும் அவரின் முன்னாள் அதிகாரியும் மிக விரைவில் மலேசிய லஞ்ச ஊழல் ஆணையம் எனப்படும் எம்ஏசிசி விசாரணைக்காக அழைக்கப்படுவர் என ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி தெரிவித்தார்.
விசாரணைக்காக குறைந்தது நால்வர் அழைக்கப்படுவர். கடந்த 2020 முதல் 2022 அம் ஆண்டு வரையில் ஆட்சி செய்து வந்த அரசாங்கங்கள் விளம்பர செலவுகளுக்காக 700 மில்லியன் வெள்ளி நிதி பயன்படுத்தப்பட்டது குறித்து எம்ஏசிசி விசாரணை செய்து வருகிறது.
அந்த நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது, அதில் எந்தெந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்டன ? என்பது குறித்து விசாரணை செய்யப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளன என அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.








