Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பமேலா லிங் குறித்து ஆகக் கடைசியான நிலவரங்களைத் தெரிவிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பமேலா லிங் குறித்து ஆகக் கடைசியான நிலவரங்களைத் தெரிவிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.24-

எஸ்பிஆர்எம் விசாரணைக்குச் செல்வதாகக் கூறி, வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின் பமேலா லிங் மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆகக் கடைசியான நிலவரத்தைப் போலீஸ் துறை அறிவிக்க வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் ஜெலுதோங் எம்.பி. R.S.N. ராயர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் அந்த வர்த்தகப் பெண்மணி காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்மணி காணாமல் போனது, பலரது கவன ஈர்ப்பாக மாறியுள்ளது. அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இதுவரை எந்தவொரு பலனும் கிட்டாதது, பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவிட்டுள்ளதாக ராயர் குறிப்பிட்டார்.

அந்த வர்த்தகப் பெண்மணி கடத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டாலும் அவரின் நிலை குறித்து போலீசார் தங்கள் விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் என்று ராயர் கேட்டுக் கொண்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது