Aug 7, 2026
Thisaigal NewsYouTube
இந்தியர்களின் வறிய நிலையை போக்க உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்
தற்போதைய செய்திகள்

இந்தியர்களின் வறிய நிலையை போக்க உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்

Share:

நாட்டில் மலேசியர்களிடையே வறிய நிலையைப் போக்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் அவரின் இந்த முயற்சியில் இந்தியர்களின் நலன் சார்ந்த விவகாரங்களிலும் ஒற்றுமை அரசாங்கம் கடந்த பத்து மாத காலமாக தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் அதிகமானோர் மலாய்க்காரர்கள் என்று பிரதமர் வகைப்படுத்திய போதிலும் விகித்தாச்சாரம் அளவில் இந்தியர்களே அதிகளவில் வறுமையில் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தியர்களிடையே வறுமை ஒழிப்பின் முன்னெடுப்புகளின் ஒன்றாக தமது தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் மூலமாக மலேசிய சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவர்களின் தொழில் திட்டங்களுக்கு உதவும் வகையில் தெக்குன் மூலமாக 30 கோடி வெள்ளி மதிப்பில் ஒரு நிதி உருவாக்கப்பட வேண்டும் என்பது தங்களின் இலக்காக இருந்து வருகிறது என்று துணை அமைச்சர் சரஸ்வதி கந்தாமி தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பி.கே.ஆர் தலைமையகத்தில் இன்று பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, தமது அமைச்சின் மூலமாக இந்தியர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டார். இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பி.கே.ஆர் சார்பில் செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் குணராஜ்ஜும் கலந்து கொண்டார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!