Feb 28, 2026
Thisaigal NewsYouTube
நாளை முதல் வரி செலுத்துவோர் e-Filing சேவையைப் பயன்படுத்தலாம்
தற்போதைய செய்திகள்

நாளை முதல் வரி செலுத்துவோர் e-Filing சேவையைப் பயன்படுத்தலாம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.28-

2025-ஆம் ஆண்டிற்கான வருமான வரி படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான e-Filing சேவை நாளை முதல் தொடங்கும் என உள்நாட்டு வருமான வரி வாரியமான எல்எச்டிஎன் அறிவித்துள்ளது.

நாளை முதல் MyKad, MyPR மற்றும் MyKAS வைத்திருப்பவர்கள், தங்களின் வரி தொடர்பான விவகாரங்களுக்கும் MyTax போர்ட்டலை அணுகுவதற்கும், அவர்களின் அடையாள அட்டை எண்ணையே வரி அடையாள எண்ணாகப் பயன்படுத்த வேண்டும்.

இதுவரை இராணுவ அல்லது போலீஸ் அடையாள எண்களைப் பயன்படுத்தி MyTax போர்ட்டலை அணுகியவர்கள், இனி தங்களின் பொது அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி தங்களது தனிநபர் டிஜிட்டல் சான்றிதழை மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

வரி செலுத்துவோர் தங்களின் வரிப் படிவங்களை எல்எச்டிஎன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related News

சபா வெள்ளம்: 7,000 பேர் பாதிப்பு; தெனோம் மாவட்டம் மிக மோசமான பாதிப்பு

சபா வெள்ளம்: 7,000 பேர் பாதிப்பு; தெனோம் மாவட்டம் மிக மோசமான பாதிப்பு

70 ஆண்டு கால இலக்கியப் பணி: தேசியப் பத்திரிகையாளர் அடிபா அமீனுக்குச் சிறப்புச் செய்ய ஏற்பாடு

70 ஆண்டு கால இலக்கியப் பணி: தேசியப் பத்திரிகையாளர் அடிபா அமீனுக்குச் சிறப்புச் செய்ய ஏற்பாடு

அமெரிக்கா - ஈரான் மோதல்: அமைதி மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு

அமெரிக்கா - ஈரான் மோதல்: அமைதி மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு

யாரையும் சங்கடப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல: எஸ்பிஆர்எம் விளக்கம்

யாரையும் சங்கடப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல: எஸ்பிஆர்எம் விளக்கம்

6.15 விழுக்காடு ஈவுத் தொகை: ஈபிஎஃப்பின் முதலீட்டுத் திறனுக்குச் சான்று - பிரதமர் அன்வார் பாராட்டு

6.15 விழுக்காடு ஈவுத் தொகை: ஈபிஎஃப்பின் முதலீட்டுத் திறனுக்குச் சான்று - பிரதமர் அன்வார் பாராட்டு

மத்திய கிழக்கில் பதற்றம்: விழிப்புடன் இருக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் பதற்றம்: விழிப்புடன் இருக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்