முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கின் அரசாங்கத்தின்போது அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மலேசியா கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரே மலேசியா கிளினிக்குகள் பேரா மாநிலத்தில் இன்னும் செயல்பட்டு வருகின்றன. க்லினிக் கொமுனிட்டி எனப் பெயர் மாற்றம் கண்ட அந்த 18 கிளினிக்குகள் மக்களின் சுகாதாரச் சேவையை வழங்கி வருகின்றன என அம்மாநில மனிதவளம், சுகாதாரம், இந்தியர் நலனுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் தெரிவித்தார்.
சுற்று வட்டார மக்களுக்கு ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற சிறு சிறு நோய்களுக்கு சிகிச்சையை அந்த 18 கிளினிக்குகள் வழங்கி வருகின்றன என சிவநேசன் சொன்னார்.
மேலும், காயங்களுக்கு மருந்து போடுவது, நீரிழிவு, இஅத்த அழுத்தம் போன்ற நோய்களின் தொடர் சிகிச்சைகள் போன்றவைகும் இங்கு வழங்கப்பட்டு வருகின்றதாக அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், ஈப்போவில் செயல்பட்டு வரும் கம்போங் தாவாஸ் கிளினிக், மஞ்சோங்கில் தாமான் சமூட்ரா, தஞ்சோங் மாலிமில் பெஹ்ராங் கிளினிக் ஆகியவற்றில் தாய் - சேய் நல சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் சிவநேசன் குறிப்பிட்டார்.








