மதம் மாறிய தமது கணவர் நாகேஸ்வரன் முனியான்டியை விவாகரத்து செய்வது தொடர்பில், தனித்து வாழும் தாயாரான லோவ் சியூவ் ஹொங் தொடுத்துள்ள வழக்கில் குறுக்கிடுவதற்கு, பெர்லிஸ் மாநில சமய இலாகாவிற்கு அனுமதி வழங்கியுள்ள அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்த மாது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இதன் மீதான வழக்கு விசாரணை, வரும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று கூட்டரசு நீதிமன்ற துணைப் பதிவதிகாரி அறிவித்துள்ளார்.
தமது 3 பிள்ளைகளைத் தமக்கு தெரியாமல், ஒரு தலைபட்சமாக மதம் மாற்றியுள்ள தமது கணவர் நாகேஸ்வரன் முனியான்டியின் நடவடிக்கை எதிர்த்து, அந்தத் தனித்து வாழும் தாயார், முழுவீச்சில் சட்டப் போராட்டம் நடத்து வருகிறார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


