சிகமாட், நவ.23-
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள வேளையில் நேற்று வெள்ளிக்கிழமை பெய்த கனத்த மழையில் ஜோகூர், சிகமாட் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மக்கள் தஞ்சம் புகுவதற்கு ஏதுவாக இன்று பிற்பகல் 2 மணி வரையில் நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக சிகாமட் மாவட்ட பேரிடர் மேலாண்மை வாரியத் தலைவர் முகமட மஸ்னி வாகிமான் தெரிவித்தார்.
இந்த வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக கம்போங் செபராங் பத்து படாக் விளக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.








